sevvanthi pookalil(mella pesungal)
http://www.youtube.com/watch?v=4zhnVm27VKQ
கூவின பூங்குயில்.. கூவின கோழி
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே....
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சம் கொஞ்சம்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
(செவ்வந்தி)
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
தாழம்பூவில் கல்யாண ஒலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்
ஆ..ஆ..
(செவ்வந்தி)
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம் என்றென்றும்
எங்களின் கைகளில்...
(செவ்வந்தி)
I think...Bhanupriya's debut film in tamil. ( with vasanth)
poove unnai nesithen (paruva raagam)
http://ww.smashits.com/player/flash/...?SongIds=19458
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடல் வாசித்தேன்
காதல் கீதம் யாசித்தேன்
சொல்ல்த்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மௌனம் தானோ தொல்லை
நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்!
கோழை போல யாசித்தாய்! :P
தேன் என்றால் சாரம் வேண்டும்
ஆண் என்றால் வீரம் வேண்டும்! :P
ஆண்மை தான் பெண்ணை வெல்ல வேண்டும்!!
I have some nostalgic memories of some lyrics here. :) I never knew IT WAS A SONG!
Anyway :) good enough to hear :)
aanantham pongida - siRai paRavai
பாடல்: ஆனந்தம் பொங்கிட
படம்: சிறைப்பறவை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சுனந்தா
http://music.cooltoad.com/music/song.php?id=95510
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைபோல் துள்ளி வா வா...வா
(ஆனந்தம் பொங்கிட)
லாலி லாலி சுப லாலி...பூவோடு மஞ்சள் உண்டு
எந்நாளும் இன்பம் உண்டு...லாலி லாலி சுப லாலி
கண்ணான கண்மணிக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும்
லாலி லாலி சுப லாலி...லாலி லாலி சுப லாலி
மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது
சோலைக்குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ
தேரில் உலா வரும் தேவ இசைக்குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ
நேரம் அந்தி நேரம் கீதம் வந்து சேரும்
ஆடைகள் மூடிய மேனியில் சுயம்வரம்
ஆயிரமாயிரம் ஆசைகள் சுகம் பெறும்
நான் அருகே வரவா மனம் உருகிட
(ஆனந்தம் பொங்கிட)
தோரண வாசலில் தங்க ரதங்களும்
தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லையென்று
மேகம் அலைந்திட தேகம்தனில் அணிவேன்
கண்கள் உன்னைத் தேடும் கால்கள் துள்ளி ஓடும்
என் மனம் உன் மனமானது ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூமுகமே சுகமே இனி தினம் தினம்
(ஆனந்தம் பொங்கிட)