Originally Posted by
Gopal,S.
இளைய ராஜா என்னதான் மகேந்திரன்,பாரதிராஜா,பாலுமகேந்திரா படங்களுக்கு தன் அபார பின்னணி இசையால் உயிர்ப்பூட்டி இருந்தாலும் , ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் என்பது , திரையுலக நண்பர்களுடன் பழகி நான் அறிந்தது. இவர் சொந்தமாக தயாரித்த அலைகள் ஓய்வதில்லை,கோழி கூவுது ,ராஜாதி ராஜா ,சிங்காரவேலன் போன்றவை ,இதற்கு கட்டியம் கூறும்.நல்ல விஷயங்களை ,உன்னத விஷயங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்,அறியாமையை கட்டியம் கூறி,விளம்பர படுத்தி,தரம் தாழ்த்தி கொள்ளும் போக்கையே நான் எதிர்க்கிறேன்.
இவருக்கு பிடிக்கும் வகையில்,மலைச்சாமி ,கட்டை வண்டி பாடி குயிலை கலாய்க்க முடியுமா? அல்லது குயில்தான் பொட்டை பிள்ளை எல்லாருக்கும் என்று குத்து டான்ஸ் ஆட முடியுமா?இதுதான் இளைஞர்களுக்கு தேவை என்பது ராஜாவின் பரந்த அறிவு திறன்.