ஒரு முறை வெளிநாட்டு குழு ஒன்று தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். அந்த வெளிநாட்டு குழுவுக்கு போட்டு காட்டுவதற்காக எம்.ஜி.ஆர்., நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., பதறிப்போய் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து திட்டினார்.
அதுவே ஒரு ஹாலிவுட் படத்தோட தழுவல் தான் அதைப்போயி அவிங்கிட்டேயே போட்டு காட்டுவீங்களா? சிரிக்க மாட்டாங்களா என்னோட படத்துல பாட்டும் பைட்டும் தான் இருக்கும். அதை பார்த்து அவர்கள் என்ன செய்யப்போறாங்க.
தில்லானா மோகனாம்பள் படத்தை காட்டுங்க, இந்த மண்ணையும், நம் கலாச்சாரத்தையும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றாராம்.
நன்றி! தினமலர்.காம்
இணைய பகுதியிலிருந்து.....