Originally Posted by
thozhar
இப்போது, ஆளும் கட்சியின் அடிவருடி கேயார் தேவையே இல்லாமல் தலைவரை சீண்டுகிறான். "ஒரு ஊர்ல" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கேயார், இளையராஜாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தான். அது வரை பிரச்ச*னை இல்லை. அதற்கு பிறகு அவர் கூறியதுதான் "உலகத்தில் ஆஸ்கார் விருது வாங்கினவங்கள விட இவர்தான் மேதை". இவர் பெயரை சொல்லவில்லையே தவிர இவர் குறிப்பிட்டது யார் என்பது குழந்தைக்கும் தெரியும். கண்டிப்பாக ஜான் வில்லியம்ஸையோ, இல்லை ஹான்ஸ் ஸிம்மரையோ குறிப்பிடவில்லை. அதுக்கப்புறம் அவர் கூறிய பில் கேட்ஸ் சம்பந்தமான விஷயமெல்லாம் வெறும் காமெடி துனுக்குகளே. குண்டு சட்டியில் உட்கார்ந்து குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் கேயார் எதற்காக ஒருவரை புகழ்வதற்காக இன்னொருவருடன் ஒப்பிட வேண்டும். "உலகிலேயே சிறந்த இசை மேதை ராஜா" என்று கூறியிருந்தாலே போதுமே. அது அவர் விருப்பம். யாருக்கும் ஒருவரை புகழ்வதற்கு உரிமை உண்டு. ஆனால், எதற்காக ஆஸ்கார் விருது வாங்கினவங்களை வம்புக்கு இழுக்கனும்? இவனுங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை? தலைவர் ஆஸ்கார் விருது வாங்காம இருந்திருந்தால் இவனுங்கெல்லாம் சும்மா இருந்திருப்பானுங்களோ.