Athaan manushan'na kurangu madiri maarite irrukanum sollitaangale...
Printable View
தங்களின் பதில்கள் எல்லாம் உங்களின் நிலையில் இருந்தே சொல்லப்படாலும் – கேட்டவர் மனதையோ அல்லது வாசகர் மனதையோ – புண்படுத்தி விடக்கூடும் என்று எப்போதாவது தோன்றியதுண்டா?
- கே.மோகன் தமிழ்ச்செல்வன், சென்னை.
அடடா! இதை மறந்து விட்டு எத்தனையோ பதில்களைச் சொல்லி விட்டேனே!
நல்லவேளை இப்போது ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி! மிகவும் நன்றி!
நான் யதார்த்தமான பதிலைத்தான் சொல்லி வருகிறேன். பல உண்மைகளை பட்டவர்த்தனமாகச் சொல்ல முடியாது என்றாலும் கூடுமான வரை கொஞ்சம் உள்ளடக்கியே எழுத முயற்சித்தேன். இதிலும் என்னையும் மீறி என் பதில் யாரையவது புண்படுத்தியிருந்தாலோ அல்லது வேறு சொல்ல முடியாத வேதனை உணர்வாக ஏற்படுத்தியிருந்தாலோ இதன் மூலமாக சத்தியமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.
இசைஞானி அவர்களே, ஒரு இயக்குநர் உங்களிடம் வந்து நீங்களும் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து இசையமைக்க வேண்டுமென்று கூறினால் நீங்கள் அதை ஏற்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து இசையமைப்பீர்களா? (கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)
- டி.மோகன்ராஜ், வாலாஜாபாத்.
அப்படி இனிமேல் ஒன்றும் பணியாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் என்னுடன் 500 – படங்களுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார் – இதையும் அவர்தான் சொல்ல வேண்டும்.
உங்களிடம் அவ்வப்போது தோன்றும் ஆணவம், அகம்பாவம் பற்றி?
- எ.சி.பி.தாஸ், திருத்துறைப்பூண்டி.
அவ்வப்போது எங்கே தோன்றுகிறது! அது ஒன்றுதானே எப்போதும் கூட இருக்கிறது. அது இல்லை என்றால் இசை எப்படி வரும்?
(ராஜபவனி தொடரும்)
இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)#Ilayaraja
பண்ணைபுரத்து இராசையா இப்போது எப்படி இருக்கிறார் ?
- பெ.கணேஷ் பாபு, திருநெல்வேலி.
அவனா? அவன் எப்போதோ செத்துப்போய் விட்டான்! அவனைச் சுமந்து கொண்டல்லவா நான் அலைகிறேன்!
பிறந்த ஊருக்கு, ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா?
- க.பா.மூர்த்தி, மதுரை.
பிறந்த உலகிற்கு இசையால் சேவை செய்கிறேன்!
“கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் தங்களின் பின்னணி இசை “தூறல் நின்னு போச்சு” திரைப்படத்தின் பின்னணி இசை, “16 வயதினேலே” திரைப்படப் பாடல் “செந்தூரப்பூவே” பாட்டுக்கு முன்னர் வரும் புல்லாங்குழல் இசை இவையெல்லாம் காடு, மலை, கடல் கடந்து செல்கிறது. எந்த மனநிலையில் தங்களுடைய இந்த இசை வடிவங்கள் உயிர் பெருகின்றன?
-ஆர்.பூவராகசுவாமி, கடலூர்.
இதற்கு மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனம் தானாகவே ஒருநிலைப்பட்டு விடும். அது காட்சிகளுக்கு தகுந்தவாறும் உயிரின் உணர்வுகளுக்கு ஏற்றவாறும் பலவிதமான ஸ்வரங்களை இசை எடுத்துக்கொண்டு தகுந்த, அதற்கேற்ற இசைக்கருவிகளில் ஒளிக்கும்போது கேட்பவர்களைக் கண்டிப்பாக மெய்மறக்கச் செய்துவிடும்.
இதற்கு இதை உருவாக்கும் ஆள் அங்கே இருக்கக் கூடாது. அவன் மறைந்து போனால்தான் இது சாத்தியமாகும். இல்லை என்றால் அவனது ஈகோதான் இசையாக வெளிவரும்.
நீங்களும் ஏன் ஆஸ்கார் அவார்டுக்கு முயற்சி செய்யக் கூடாது?
- எஸ்.வி.பார்த்தசாரதி, திருச்சி.
“ஆஸ்கார்” விருது என்பது ஒரு ஐந்தாறு பேர் கொண்ட குழு. இந்தக் குழு தீர்மானிப்பதுதான் உயர்ந்தது என்று அர்த்தமில்லை! அதைவிடச் சிறந்த இசை அவர்களின் கவனத்திற்கு வராமலே போயிருக்கலாம். விருதிற்காக விண்ணப்பம் செய்த படங்களுக்குள்ளும் கலைஞர்களுக்குள்ளும் மட்டுமே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.
இதற்குப் போய் நான் விண்ணப்பம் போட்டு...
‘ஐயா ஐயா இதைக் கேளுங்கள் நான் நன்றாக இசையமைத்திருக்கிறேன்’ என்று கேட்கவேண்டுமாக்கும்? அடப் போங்கய்யா!?
https://www.facebook.com/ERBRecords
ALL SUPER EP LP and CASSETTE's
Thanks for reminding San_K! Ilaya nadhi is also sung by Srinivas
I did not like ilaya nadhi much, but i like ilaya nilave song. He has sung it with bhavatharini.
You can check out the song in Thiraipaadal website
thanks,
Krishnan
Yes I remember that song. One of pioneer kind of modern songs :)
in one of the super singer episode, he said aayiram thaamarai mottukale is the greatest piece of music in cinema history.
Singer Srinivas has sung about 5 songs in the music of IR
1. Ilaya Nilave - Ponnu vettukaran
2. Manasa kili - one of the singers - Manam virumbuthey unnai
3. The opening song in the movie Chinna Durai - Unna pola - in the cass. it is spb but in the movie it is srinivas
4. Ilaya nadhi from Manasellam
5. Aaya kAlai - Viswa Thulasi
What exactly is Srini's problem? He seems to be rabble-rousing every time a new IR/ARR album comes out. He can't say a positive thing about IR without dragging ARR into it. And he can't praise ARR without an attempt to degrade IR. Sad and unfortunate that these kind of people exist in industry. What's even sadder is that Raja fans seem to be ok with it (in the name of maturity!). I see him being part of a popular Raja Fans group, and I see that he's invited to Raja's events (he shows the nerve to sing an ARR song on stage!). Tolerance is good.. but even that has its limits.