தூற்றனும் என முன்முடிவு செய்துவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுகிறீர்கள். இசையும், இசை உருவாக்கத்திற்கான பின்புலத்தின் மீதான அடிப்படை அறிவும் மேலோங்கி இருப்பதாக கருதி ஒருவரை இங்கே சிலாகிக்க முனையும்போது என்ன தவறு? ஒரு சாதாரண இசையமைப்பாளர் ஒரு சுமாரான மெலடி தருகிறார். அப்பாடலுக்கான பின்னணி இசையை சொதப்பியும் மெலடியால் பேசப்படுகிறார் என வைத்துக் கொள்வோம். அவருடைய ஆக்கத்தினை "பேஷ்! பேஷ்! சிறப்பாக இருக்கிறது! அருமையான இருக்கிறது! கேட்பதற்கு இன்பமாக இருக்கிறது! " எனப் புகழ்கிறொமென வைத்துக் கொள்வோம். அப்போ ராசைய்யாவின் ஆக்கங்களை என்னவாறு பாராட்டுவது? நமது பண்பாட்டின் தவறே அதுதான். இருக்கிற அட்ஜெக்டிவையெல்லாம் தேவையில்லாத இடத்தில் பயன்படுத்தி, சிலாகிக்க வேண்டிய ஒன்றிற்கு தேவையான பதங்களை ஒதுக்குவதில்லை..