Results 1 to 10 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    என் விருப்பம் (9)

    'நட்சத்திரம்' என்று ஒரு படம். நீயா பட வெற்றிக்குப்பின் ஸ்ரீபிரியா தயாரித்தார். தெலுங்கில் ஜெயசுதா நடித்து வெளிவந்த 'சிவரஞ்சனி' படத்தின் தமிழ் ரீமேக். துரை இயக்கத்தில் சங்கர் கணேஷ் இசையில் வந்தது.

    படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதில் நடிகர்திலகம், ரஜினி, கமல், சாவித்திரி, மஞ்சுளா, இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்கள்.

    கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் செய்து விற்கும் ஸ்ரீபிரியா எப்படி நகரத்துக்கு சென்று பெரிய சினிமா நடிகையாகி ஒரு அயோக்கியனின் வலையில் சிக்கி, மனமுடைந்து இறந்துபோகிறாள் என்பது கதை. கதாநாயகனாக அந்த நடிகையின்மேல் உயிரையே வைத்திருக்கும் அவளது ரசிகன் (ஹரி பிரசாத்). கொஞ்சம் வித்தியாசமான கதைதான். இதில் 'அவளொரு மேனகை என் அபிமான தாரகை' என்ற அருமையான பாடல் ஏற்கெனவே இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இன்னொரு மனதை மயக்கும் பாடல். கதாநாயகி ஸ்ரீபிரியா கிராமத்தில் கொட்டாங்கச்சி பிடில் விற்பவளாக வரும்போது பாடும் பாடல்..

    "வைகை கரையினில் ஒரு பறவை - அது
    வானத்தில் தேடுது தன் உறவை"

    தெருத்தெருவாக நடந்து பிடில் விற்கும்போது பாடிக்கொண்டே சென்று, ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து விற்பனை செய்துகொண்டே, பாடலில் தன் கதையையும் சொல்லியவாறு தொடர்ந்து பாடும்போது இனம் புரியாத சோகம் நம் மனதில் படரும். எந்தவித பந்தாவான கைகால் அசைவுகள் இல்லாமல் முகத்தில் ஒரு மாதிரியான சோகம் இழையோடும் முகபாவத்துடன் ஸ்ரீபிரியா பாடும்போது பாடலுடன் நாம் ஒன்றிப்போவோம். கடைசியில் ஓடிவந்து காசை நீட்டும் சிறுவனிடம் 'எல்லாம் விற்றுவிட்டது' என்று சொல்வதுபோல கூடையைக் கவிழ்த்துக் காட்டியபடி பாடலை பாடி முடிக்கும்வரை நம் மனதை என்னவோ செய்யும்.

    ஸ்ரீபிரியா நடித்து எனக்குப்பிடித்த சில பாடல்களில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. (இன்னொன்று, வசந்தத்தில் ஓர் நாள் படத்தில் இடம்பெற்ற 'வேண்டும் வேண்டும் உந்தன் மனது' என்ற மனத்தைக் கலங்கடிக்கும் பாடல்).

    மற்றவர்களுக்கு எப்படியோ, என்னைப்போன்ற எமோஷனல் பேர்வழிகளுக்கு மனத்தைக் கரைய வைக்கும் பாடல் 'வைகை கரையினில் ஒரு பறவை'. சங்கர் கணேஷ் இசையில் வந்த அழகிய மேலோடி (மெட்டும் வேறெங்கும் தழுவப்பட்டதா என்பது தெரியாது)...

  2. Likes gkrishna, madhu, Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •