-
3rd July 2016, 08:46 AM
#1
Senior Member
Diamond Hubber
Originally Posted by
vasudevan31355
மது அண்ணா!
இரு நடிகைகள் ஏற்றம் இறைத்து பாடுவது போல தமிழில் ஒரு பாட்டு உண்டல்லவா! ஞாபகம் வருவேனா என்கிறது.
ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும்
-
3rd July 2016 08:46 AM
# ADS
Circuit advertisement
-
4th July 2016, 05:58 AM
#2
Senior Member
Veteran Hubber
Happy Independence Day ! Have fun with fireworks (where permitted)
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
4th July 2016, 07:16 AM
#3
Senior Member
Seasoned Hubber
-
4th July 2016, 03:16 PM
#4
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும்
ஒருவழியா மண்டை காய்ஞ்சி கண்டுபிடிச்சேன். நம்ம கன்னக்குழி ஸ்ரீப்ரியா, ராங் நெம்பர் விஜயா என்று ரெண்டு 'யா' அழகிகளும் ஏத்தம் இறைக்க ராஜாவின் அற்புதமான மெட்டு. ஜானகி மற்றும் இன்னொருவர் குரல்களில். ஜானகி இப்பாடலுக்கு பாந்தமாக பொருந்துவார். ஸ்ரீப்ரியாவுக்கும்தான். ஆனால் அழகில் விஜயா ஒருபடி மேலே போவார். ஏற்றத்திலேயும்தான். ப்ரியா கவலை நீர்க் கழியை என்னமாய் உலக்கை இறக்குவது போல இறங்குகிறார்! வாயசைப்பும் கரெக்ட். குறிப்பாக அந்த 'ஹோய்'.
ஒருபொடியாய் ஒண்ணு ஓடிவாடா ராமா
காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
லாபமடா சாமி
ஏத்தம் இறைச்சி காத்துக் கிடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் நின்னு
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வராதோ.... ஹோய் என்னைத் தேடி
காவலர்கள் துரத்த, ரஜினி தப்பித்து ஓடிவர, ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கும் பிரியா பாடலின் இடையே வரப்பில் ஓடிவரும் ரஜனியைப் பார்த்து விட்டு 'என் சாமியும் வந்தாச்சு என்னைத் தேடி' என்று பாடல் வரியை மாற்றுவதும் ஜோர்.
'தந்தனத்தானா தந்தனத்தானா தந்தனத்தானா' பெண்கள் கோரஸ் வாவ். ராஜா the கிரேட்.
பைரவி பட டைட்டிலில் பின்னணி டி.எம்.சௌந்தரராஜன், ஜானகி என்று இருவர் பெயர்கள் மட்டுமே காட்டுவார்கள்.
ஆனால் மேற்சொன்ன பாடலில் ஜானகியுடன் சேர்ந்து ஒய்.விஜயாவிற்காகப் பாடும் அந்த மாயக் குரல் மயக்குகிறது.
'பையன் பொறந்தா பொங்கலும் உண்டு மங்களம் உண்டு
கொத்து மொழக்கு (சரியா? வெத்தலத் தட்டு ஊர்வலம் உண்டு'
என்று தனியாகத் தெரியும் அந்த அல்வாக் குரல் யாருடையது? சசிரேகா?... டைட்டிலில் பெயர் போட வில்லையே? ஒய்? ராகவேந்திரன் சார், மதுண்ணா ப்ளீஸ்.
ரகளை பாட்டு.
Last edited by vasudevan31355; 4th July 2016 at 03:24 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th July 2016, 12:16 AM
#5
Senior Member
Veteran Hubber
Bhakthi
From Chandralekha (1948)
baalan karuNai...............
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks