-
19th February 2016, 06:16 PM
#11
Senior Member
Veteran Hubber
Originally Posted by
abkhlabhi
சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பல்லவி பாருங்கள்..
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
ஆம் இனியவளே.. என்கிற பல்லவியின் முதல் சொல்லை இனி அவளே.. என்று பதம் பிரித்து இனிமை சேர்க்கிற இன்பமிருக்கிறதே.. அது யாருக்கு வரும்?
"இனியவளே என்று பாடி வந்தேன்" பாடல் புலவர் புலமைப்பித்தன் எழுதியது.
ஆனால் இதே 'இனியவளே'யை கண்ணதாசனும் கையாண்டிருக்கிறார், வைர நெஞ்சம் படத்தில்
பத்மப்ரியாவை டீஸ் செய்து சிவாஜி பாடும் முதல்பாடல்
' ஏஹே .... மை ஸ்வீட்டி...
என் பிரியத்துக்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்துக்கினியவளே'
('என் பழக்கத்துக்கு இனியவளே', ‘என் பழக்கத்துக்கு இனி அவளே' கண்ணதாசா, உன்னை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்பா)
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
19th February 2016 06:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks