Quote Originally Posted by saradhaa_sn
ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஸ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு 'பத்ம-நாமம்' வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்.

இந்த முறையும் வஞ்சிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மெல்லிசை மன்னர் இருப்பது தொடர்கதையின் அடுத்த அத்தியாயம்.

இந்தப் பட்டத்துக்கும் மதிப்பு கொடுத்து அது தகுதி உள்ள சிலருக்கு கிடைக்க வேண்டுமே என்று நாம் நினைப்பதைக் கூட இனி நிறுத்திக் கொள்ளலாமோ ?