-
10th October 2014, 05:22 AM
#1
Moderator
Diamond Hubber
இனிய இசைஞர்கள்! - ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் இருக்கும்போது அதிகாலைகளில் இசையமைப்பாளர் தாஜ்நூரை வரச்சொல்லி அண்ணா சாலை தர்ஹாவுக்குச் செல்வார். பிறகு கார், மெரினாவுக்குச் செல்லும். கடற்கரை அருகே காரில் இருந்தபடி அதிகாலைக் கடலின் அழகை ரசிப்பது இஷ்டம். ஆம்பூர் தர்ஹா வாப்பாதான், ரஹ்மானின் குரு. நாள் ஒன்றுக்கு ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் நோன்பு போன்ற இஸ்லாமிய நடைமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பார் ரஹ்மான். சம்பாத்தியத்தின் 20 சதவிகிதத்தைத் தானம் செய்வது வழக்கம்.
பாலிவுட்டின் படா தயாரிப்பாளர், கோலிவுட்டின் மாஸ் ஹீரோ, ஹாலிவுட்டின் இயக்குநர்... என சர்வதேசப் பிரபலங்கள் ரஹ்மான் ஸ்டுடியோவில் சர்வசாதாரணமாகக் காத்திருப்பார்கள். ஆனால், எத்தனை பெரிய பிரபலம் வந்தாலும் ஸ்டுடியோ பக்கம் மது, புகை இரண்டுக்கும் தடை!
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புவார். பாடலாசிரியர்களிடம், 'நம்மகிட்ட இருக்கிற டியூனுக்குள்ள எழுதிட்டே இருக்காதீங்க. பாடலின் சிச்சுவேஷன் என்ன கேக்குதோ, அதுக்குப் பொருந்துற மாதிரி நாலு பக்கக் கவிதையாக்கூட எழுதுங்க. அதுல பெஸ்ட் வரிகளை வெச்சு நான் டியூன் பண்ணிக்கிறேன்!’ என்பார்.
தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னம், அடுத்து இயக்கும் படத்தில், தன் மகன் அமீனையும் பாடகராக அறிமுகப்படுத்தவிருக்கிறார் ரஹ்மான். 'அதிகம் பேச மாட்டார்; சிரிக்க மாட்டார்’ என ரஹ்மானைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. நள்ளிரவில் தொடங்கும் கம்போஸிங் அதிகாலையில் முடிந்து கிளம்பும்போது, 'வீட்ல திட்டு விழப்போகுது. போகும்போது பால் பாக்கெட் வாங்கிட்டுப் போயிடுங்க’ என்றெல்லாம் ஜோக்கடித்துத்தான் விடை கொடுப்பாராம்.
ஒரு பாடல் பதிவு தொடங்கும்போது பெரிய மெழுகுவத்தி ஒன்றை ஏற்றி, 'இன்ஷா அல்லா’ என வணங்கிவிட்டு கம்போஸிங் தொடங்குவார். மெழுகுவத்தி முழுதாகக் கரையும் முன்பு, பாடல் பிறந்திருக்கும்!
__________
ஆனந்த விகடன் - 15 Oct 2014
-
10th October 2014 05:22 AM
# ADS
Circuit advertisement
Bookmarks