-
29th November 2015, 10:52 PM
#1
Junior Member
Devoted Hubber
பாடல்: திருத்தேரில் வரும் சிலையோ | திரைப்படம்: நான் வாழ வைப்பேன் | SPB , P சுசீலா | சிவாஜி கணேசன், K R விஜயா | இளையராஜா | 1979 | வாலி
ஓலி வடிவம்:
http://download.tamiltunes.com/songs...070%20Hits.mp3
திரை வடிவம்:
பாடல் வரிகள்:
ஆண் :
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ ( இசை )
பெண் :
மண மேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மண மேடை வரும் கிளியோ
இசை சரணம் - 1
ஆண் :
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது ( இசை )
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோகனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடை தனில் அரங்கேற்றம்
பெண் :
மண மேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
ஆண்:
திருத்தேரில் வரும் சிலையோ
இசை சரணம் - 2
பெண் :
செந்தூரக் கோவிலின் மேளம் இது
சிருங்கார சங்கீதம் பாடுது ( இசை )
ஜில்லென்ற தென்றலின் காலம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
ஆண் :
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
பெண் :
மண மேடை வரும் கிளியோ
நன்றி: லக்ஷ்மண் ஸ்ருதி
Last edited by Isai Rasigan; 30th November 2015 at 09:27 PM.
Reason: To add lyrics
-
29th November 2015 10:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks