-
7th October 2013, 04:04 AM
#11
Junior Member
Junior Hubber
This was posted in Ilayaraja(Indian maestro) face book page.
இந்த படம் எழுதின உடனே, ”பாடல்கள் வைப்பதற்கு இடம் இல்லை. Heroine இல்லை. So .. Duet இல்லை. .. Love’ம் கிடையாது”. இதெல்லாம் இல்லை என்று தெரிந்தபிறகு இன்னும் யோசித்தால்.. படத்தில் 90% Dialogue இல்லை. படம் Silent’ஆ ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு Action படம். Deep Emotions நிறைந்த படம். இதை யார் ஒரு Deeper Music Sensibility’யுடன் Handle பண்ண முடியும் என்று யோசித்தபோது இந்தியாவிலேயே ஒரே ஆள் இளையராஜா மட்டும்தான். இது அவரை உயர்த்திப் பேச வேண்டும் என்பதற்காக இல்லை. இதுதான் Fact.. எனக்குத் தெரியும்.
So.. நேராக அவரிடம் சென்றேன். அவர் வழக்கம்போல பயங்கரமாக என்னைத் திட்டினார். ‘என்ன இது..? பாடல்களே இல்லாமல் எதற்கு நீ வந்தாய்?” என்று கேட்டார். “இல்லப்பா.. நீங்க கதை கேளுங்க” என்றேன். கதை கேட்ட உடனே, ‘என்னடா இது? இப்படிச் செய்திருக்கிறாய்” என்றார். நான் அவரிடம், ‘இல்லப்பா.. நீங்கதான் பண்ண முடியும்” என்றேன். அதேபோல Double Positive முடிந்து அவரிடம் காட்டியபொழுது அவர் இதைத்தான் கூறினார்.. “நிறைய வேலை கொடுத்திருக்க நீ.. நான் எப்டி பண்ணப்போறேன்? எனக்கு Time’ஏ இல்லை” என்றார். ‘இல்லப்பா.. நீங்கதான் பண்ணனும்’ என்றேன். அவர் செய்து முடித்ததும் பார்த்தால்.. I was Shattered… அப்படி ஒரு Sweet Shock எனக்கு. ”இந்த மாமேதையைத் தவிர வேறு யாரால் இப்படிச் செய்திருக்க முடியும்” என்று யோசித்து.. I touched his feet. ‘ரொம்ப thanks’ப்பா’ என்றேன். ‘இல்லடா.. இன்னும் நான் நிறைய Justice பண்ணிருக்கணும்னு ஆசைப்படுறேன். அடுத்த படம் பண்ணும்போது எனக்கு நிறைய Space and Time கொடு’ என்றார். அவருக்கு சம்பளமே மிகக் கம்மியாகத்தான் கொடுத்தேன். ஆனால் அந்த இசையைக் கேட்கக் கேட்க.. I wanted to dedicate that to all the fans of Ilayaraja… as well as Music Lovers. Tracks எல்லாம் எடுத்து Net’ல் எல்லோருக்கும் Free’யாகக் கொடுத்தேன். It has now become a huge news. இப்போது அதன் Original Soundtrack’ஐ எல்லோரும் கேட்கிறார்கள். எனவே ஒரு 10,000 CDs நானே போட்டு.. I’m going to give them to people who ever want that. இது கொஞ்சம் Expensiveதான். ஆனால் இதுதான் ஒரு Greatest Musician’க்கு நான் செலுத்தும் மரியாதை.
இளையராஜா இல்லாமல் என்னால் Cinema’வுக்கு வந்திருக்க முடியாது. அவர் பாடல்கள்தான் என்னை சினிமாவை ரசிக்க வைத்தன. Cinema என்பது ஒரு Exotic ஆன மொழி என்பது எனக்குத் தெரிந்ததே இளையராஜாவால்தான். Whenever I go to Ilayaraja.. that’s going to be a great film or gud film. அது ஓடுதோ ஓடவில்லையோ அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. My Father is always there to take care of me. He will always be giving me great wonderful Music. நான் ராத்திரி பன்னிரண்டு மணிக்குக் கூட அவர் வீட்டுக்குச் சென்று அவரைத் தட்டி எழுப்பலாம். அந்த அளவுக்கு அவரிடம் எனக்கு உரிமை உண்டு. இது என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய Blessing" - Director Myshkin
-
7th October 2013 04:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks