-
19th December 2013, 09:42 PM
#11
Junior Member
Devoted Hubber
Originally Posted by
venkkiram
இந்தக் கேள்வியே தவறு.. கேள்வி கேட்பவனுக்கு உண்மையிலேயே யதார்த்த நிலையை புரிஞ்சிக்கக் கூடிய ஆற்றல் இருந்தால் "அது எப்படி! எவ்வளவு இசையமைப்பாளர்கள் ராஜாவுக்கு பிறகு வந்தாலும் கிராமம், நகரம் என எல்லா இடத்திலும் ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டெ இருக்கிறது? எப்படி பண்பலை எப்.எம் நிகழ்ச்சிகளிலும் / பாடல்களுக்கென இருக்கும் தொலைக்காட்சிகளிலும் / மேடைக் கச்சேரிகளிலும் ராஜாவின் பாடல்கள் இன்னமும் பலராலும் கேட்கப்பட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறது? எப்படி இன்னமும் அவரது பாடல் துண்டுகளை இக்கால இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் காட்சிகளுக்கு வைக்கிறார்கள்? மைய நீரோட்ட வணிகப் படங்களில் முன்பு போல ராஜா ஈடுபடவில்லை என்றாலும் இன்னமும் அவரது இசை மீதான விருப்பம் மக்களிடையே அணையாமல் ஒளிவிட்டுக் கொண்டு இருக்கிறது? " எனக் கேட்டிருப்பார். ராஜா இனி இசையமைக்க வேண்டியதே இல்லை. இதுவரை இசையமைத்த பாடல்களே போதும். காலம் கடந்து நிற்கும். அவரது பாடல்கள் எத்தனை எத்தனை எம்.பி.3 கள் எத்தனை எத்தனை கம்யூட்டர்களிலும், ஒலித் தகடுகளிலும் பதியப் பட்டிருக்கிறது என்பதை கணக்கிடவே முடியாது. குறைந்த பட்ஜெட்டில் ஒரு சின்ன தள்ளுவண்டியில் எம்.பி.3 தகடுகளை விற்பனை செய்யும் இடத்தில் கூட, ராஜாவின் பாடல்கள் அடங்கிய நிறைய தொகுப்புக்கள் அதிகமாக இன்னமும் மக்களால் வாங்கப் படுகின்றன. வைரமுத்து வரிதான் நினைவுக்கு வருகிறது. "தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து"
இப்போதெல்லாம் இங்கு யாரும் எழுதுவதில்லை, ராஜா சாரை பற்றிய தகவல்களை முன்பு போல் இங்கு யாரும் பகிர்ந்து கொள்வதில்லை என்று நினைக்கும் போதெல்லாம் வெங்கிராம் போன்றவர்கள் எழுதுவதால் தான், இந்த பகுதி மீண்டும் மீண்டும் எங்களை இங்கு வரவைக்கிறது. இங்கு தொடர்ந்து வந்து போவது 15 ஆண்டு கால பழக்கம், மாற்றுவது சிரமம். என்ன எழுதினாலும் சரி, எதை பகிர்ந்து கொண்டாலும் சரி, அது ராஜா சார் பற்றியதாக இருக்கும் பட்சத்தில் எல்லோரும் தொடர்ந்து எழுதுங்கள். இந்த பகுதியை தக்கவைத்து கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. அங்கங்கு அள்ளி தெளிக்கபட்டிருக்கும் ராஜா சார் பற்றிய தகவல்களை இங்கு தொடர்ந்து அளிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
-
19th December 2013 09:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks