-
19th July 2014, 10:05 AM
#11
Junior Member
Newbie Hubber
Originally Posted by
venkkiram
ராஜா போன்று இன்னொரு பிறவி நம் மண்ணில் பிறப்பது அரிதே. பறந்து பட்ட இசை ஞானம் மட்டுமல்லாமல், மொழியறிவு, கலாச்சார, பண்பாட்டுத் தள அனுபவம், சிறுவயதில் ஊர்ஊராக அலைந்து திரிந்து மேற்கொண்ட கம்யூனிச பிரச்சார அனுபவம் மூலம் முகர்ந்துகொண்ட மண்வாசனை.. இதெல்லாம் ஒரே நபருக்கு! ம்ஹும்.
வெங்கி ராம்,
நீங்கள் இசையையும் தாண்டி குதிக்கிறீர்கள். சரி , நானும் விளையாட்டில் தங்கள் நண்பன் என்ற முறையில் குதிக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல அடிப்படை வாழ்க்கையிலிருந்து மேலெழுந்த நமது பண்பாட்டு மண்ணின் மைந்தனை ,சமத்துவம் பேசிய
communism பின்னணியும் , அது சார்ந்த இலக்கிய அறிவும் கொண்ட ,இசை வல்லுநர் வாழ்க்கை ,1976 வரை இருந்தது,அதன் பிறகு
தொடர்ந்ததா ?
1) மண்ணின் அடிப்படை சமூகத்திலிருந்து வந்தவர்,அவர்களோடு தன்னை ஐக்கிய படுத்தினாரா,அல்லது எம்.எஸ் பாணியில் மேல்தட்டோடு ஐக்கியம் ஆனாரா? தன் மக்களை சமூக ,பண்பாட்டு சார்ந்த மதிப்பீட்டு முறையில் வளர்த்தாரா?
2)பூர்ஷ்வா முறையில் ,பிறரை அவமதிப்பது,சிறு சிறு உரசல் வந்தவர்களை எதிரி போல பாவிப்பது ,பழி வாங்குவது,சுற்றம்,சொந்தம்,நட்பு இவற்றை உதாசீனம் செய்து நம்பியவர்களை நட்டாற்றில் விடுதல் இவற்றை செய்யாமல் இருந்தாரா?
3)இவரது ஆன்மீக பற்று ,இவர் அளவு மீறிய அகந்தையை கட்டுக்குள் வைத்திருந்ததா ?
4)தொழில் போட்டியாளர்களை ,வளரும் இளம் இசையமைப்பாளர்களை இவர் எதிர் கொண்ட விதம் பெருமைக்குரியதா?
5)இவர் தன்னை நம் மண் பாரம்பரிய இசை பிரும்மங்களோடு இணைத்து கொள்ள விரும்பினாரா அல்லது மொசார்ட் ,பீத்தோவன் நகலாக விரும்பினாரா?
என்னுடையது கேள்விகள் மட்டுமே.பதிலல்ல.
-
19th July 2014 10:05 AM
# ADS
Circuit advertisement
Bookmarks