-
18th July 2016, 03:23 PM
#11
Junior Member
Devoted Hubber
சனி கிழமை ஜெயா தொலைக்காட்சியில் கடலோர கவிதைகள் இறுதி 15 நிமிடம் பார்க்க நேர்ந்தது.
க்ளைமாக்ஸ் இது தான்:
தாஸ் அடிபட்டு ஜெனிபர் நினைவாகவே மருத்துமனையில் கிடக்கிறார். கங்கம்மா அதை புரிந்து கொண்டு பட்டினத்துக்கு போய் ஜெனிபரை அழைத்து வர வேண்டும். தாஸை பார்க்க முட்டம் வரும் ஜெனிபர், அவரை பார்த்துவிட்டு தொந்தரவு செய்யாமல் திரும்பி போகிறார். ஜெனிபர் வந்ததை தெரிந்து கொண்டு, அரை உயிராய் இருக்கும் தாஸ் தட்டு தடுமாறி தேவாலயம் வரை போய் மணி அடிக்க ஊர் மக்கள் அங்கு ஓடி வருகிறார்கள்.. ரயில் நிலையம் சென்ற ஜெனிபரும் வந்து சேர, சுபம். மணி அடித்து இருவரும் இணைகிறார்கள். கங்கம்மா கடலில் ஐக்கியம் ஆகிறாள்.
பாரதிராஜாவுக்குரிய முத்திரைகளுடன் இதை 15 நிமிடம் உணர்ச்சி பொங்க காட்சிகளாய் காட்ட வேண்டும். வலம்புரி சங்கு, ஊர் மக்கள், தேவாலயம், கடல், ரயில், இயற்க்கை சீற்றம், மருத்துவமனை என்று ஏகத்துக்கு காட்சிகளை அமைத்து விட்ட பாரதிராஜா
'காதல் என்னும் அமுத அலைகள் அடித்து கொண்டே இருப்பதால் தான் இந்த பூமி இன்னும் ஈரமாகவே இருக்கிறது" என்று முடித்து விடுகிறார்.
படம் வெளிவந்த கால கட்டத்தில் ( 29 வருடங்களுக்கு முன்பு) ராஜா சார் எவ்வளவு பிஸி என்பதை நாம் அறிந்தது தான். அவசர கோலத்தில் அள்ளி தெளித்து தன் வேலையை முடித்து கொடுத்து விட்டு போய் விடாமல், தன் பொறுப்பை உணர்ந்து, கொடுக்க பட்ட நேரத்தில், ஒவ்வொரு நொடிக்கும் தோள் கொடுத்து சற்றும் தொய்வில்லாமல், அடுக்கடுக்காய் வெவ்வேறு விதமாய் தனக்கு தெரிந்த வித்தையை தான் பரிவாரங்களுடன் கடலோர கவிதையை தூக்கி நிறுத்துகிறார் ராஜா சார். அந்த மலைப்பு இரண்டு நாளாகியும் எனக்கு இன்னமும் தீரவில்லை.
ராஜா சார் அன்று செய்தது போல் இன்று செய்வதில்லையே என்று ஏங்கவே தேவை இல்லை. அன்று செய்ததையே எப்படி செய்தார் என்று யாராலும் இது வரையில் கண்டு பிடிக்க முடியவில்லை. தலைமுறை தலைமுறையாய் இசை படிப்போர் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம். ராஜா சார் என்கிற பாடத்தின் சுருக்கம் இது தான்: : "stand out - to be outstanding". இந்த ஆச்சர்யம் எனக்கு அடிக்கடி வரும். மலைத்து போவேன். எப்படி, எதற்கு செய்தார்கள் என்ற குழப்பம் வரும்போதெல்லாம் நான் நினைத்து கொள்ளவது இவர்களை தான்.
பார்க்காத வள்ளுவர், ராஜராஜர்
பார்த்த ராஜா சார்
-
18th July 2016 03:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks