-
7th March 2009, 06:47 AM
#11
Senior Member
Veteran Hubber
ஹா ஹா ஹா ஹா
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
எந்த நாடு போனாலும் , இந்த கூடு வேகுது ,
கூட்டத்தோடு வறுமையும்தான் நாடு மாறுது ,
பாதி வயிறு காயுது , மீதி வயிறு தேயுது ,
மனுஷ சாதி மனுஷனத்தான் உசிர வாங்குது ,
ஆட்டம் காணும் வாழ்க்கையிலே , ஆட்டம் வருது அதிசயமா ,
பட்ட பாடு எட்டி நிக்க , பாட்டு வரும் அதிரசமா ,
வெறும் வார்த்தைகள் கேட்கையிலே ,
துருதுருக்குது மனதினிலே ,
திருவாசகம் கோவிலிலே , கருவாசக தெருவினிலே ,
ஆதியிலே எழுதி வச்ச பாட்ட மட்டும்கேட்டுக்கோ ,
காச உள்ள பூட்டிக்கோ
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
கல்லும் மண்ணும் கலந்தாலும் ,
எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான்
கையில் வந்து பசி தொடச்சா , அது அமிர்தமம்மா ,
ஒட்டி போன வவுத்தளையும் , அடிக்கிற வகை ஏராளம் ,
தட்டி கேட்டு , தவுச்சதுண்டு எதுத்து கேட்டோமா ?
கல்லு முள்ளில் படுத்தாலும் ,
தூக்கம் வருது படு சுகமா ,
முழிகிறபோ வேதனையும் கண்முழிக்கும் பாதகமா
உலகம் எங்கும் ஏழையுண்டு
துன்பம் என்னும் தொடர்பும் உண்டு
ஒட்டு போட்ட துணி போல கொட்டிடாத வாழ்க்கை உண்டு ,
நான் படிக்கும் பாட்டு மட்டும்,
வீதி எங்கும் வெடிக்கும் , ஏழை துன்பம் துடைக்கும் ,
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
என் மன வானில் .....யேசுதாஸ், ஸ்ருதி கமலஹாசன்.....ஸ்ரீ.இளையராஜா
http://www.divshare.com/download/6738303-fd0
vinatha.
-
7th March 2009 06:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks