-
20th May 2009, 06:09 PM
#11
Senior Member
Platinum Hubber
May 18th
________
மருத்துவர்கள் மார்கபந்துவும் ஹம்ஸாவும் தங்கள் மரியாதையைத் தெரிவித்து, அஷோக்கை தங்கள் குருவாக இருக்க வேண்டுகின்றனர். அவனோ, தனி மனிதனுள் இருக்கும் இறைவனை கண்டுணர்ந்து அவனை தியானித்தலே சிறந்தது எனக் கூறுகிறான். எதிர்காலமென்றும் கடந்த காலமென்றும் ஏதும் இல்லை. நிகழ்கால மணித்துளிகளே சத்தியமானது. யுகங்களாகவும், ஆண்டுகளாகவும், பிரித்து நொடிகள் என கூறுகட்டி இருக்கும் நேரம் பிரிக்க முடியாத ஒன்று. அதன் இருப்பு ஒன்றே உண்மை. இருப்பு நிலையில் உள்ள அந்தந்த வினாடிகளே நிச்சயமானவை. மற்றெல்லாம் இல்லாத ஒன்று. காலம் எனும் சொல் காலவரையற்றது. கணிக்க முடியாதது. இந்நிலையில் இருந்து இறைவனை உணர்ந்த யோகிகள் பலர். அப்படிப்பட்ட யோகிகளும் ஞானிகளும் மேதைகளை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். அவர்களால் இரமணரைப் போல் உயர்நிலை இருப்பில் இருந்து கொண்டு தங்களை இயக்க முடியும். ரமணர் அறுவை சிகிச்சையின் போதும் கூட உயிர்நிலையில் தன் பிரக்ஞையை இருத்திக்கொண்டு உடல் பிரக்ஞையை கடந்த நிலையில் இருந்தது பலரும் அறிந்ததே.
மனோவியாதி முதல் பல கொடிய நோய்களும் பணம் படைத்தவனையே தாக்குகின்றது. ஏனெனில் பணம் படைத்தவன் பணத்திற்காக பறக்கிறான். அது தேவைக்கு அதிகமாக இருந்து விட்டாலோ இன்ன பிற கவலைகள். அதை சேர்த்து வைப்பதும், பாதுகாப்பதும் இதயத்தின் பலகீனத்தை அதிகரிக்கிறது. பணம் சேர்ப்பது குற்றமா என்றால். இல்லை. பின் எதனால் வியாதி வருகின்றது?
அளவுக்கு அதிகமாக எதின் மேலும் பிரியம் வைப்பதே வியாதிக்கு வித்து. பிரியம் என்பது பற்றைக் குறிக்கிறது. பற்றின்றி பணம் சேர்ப்பதோ, பிற கடமைகளைச் செய்யும் மனிதனை வியாதி அண்டுவதில்லை. அவனிடம் பற்று இல்லாத போது மனம் ஒரு நிலைபட்டு இறைவனின் தியானமும் சித்திக்கிறது.
பற்று ஆசைக்கு வித்திடுகிறது. ஆசை நிறைவேறாத போது கோபமும் வருத்தமும் பெருகுகிறது. வெறி அதிகரிக்கிறது. நல்ல நினைவுகள் அழிந்து புத்தி நாசம் ஆகிறது என்று கீதை உரைக்கிறது.
Chapter 2 - Verses 62 & 63
dhyayatho vishayaan pumsa: sangks theshu upajayathe |
sangaath sanjayathe kaamah kamaath krodha abhijayathe ||
krodhaath bhavathi sammoha: sammohaath smruthi vibramah: |
smruthi bramshaadh bhudhinaso budhinashath praNashyathi ||
ஒருவன் உலகியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் போது, சிந்திக்கும் போது, அவனுக்கு அதன்பாற் பற்று ஏற்படுகின்றது. பற்றிலிருந்து ஆசையும், ஆசையின் காரணமாய் கோபமும் உண்டாகிறது.
கோபம் கொண்டாலோ மதிமயக்கம் தோன்றி நினைவாற்றல் தடுமாறுகிறது. நினைவாற்றல் குன்றிய நிலையில் பகுத்தறியும் தன்மை குறைவதால் மீண்டும் அவனுக்கு புலன்களின் பாலும் உலகியல் நாட்டதிலும் அறிவு தடுமாறி அழிவு நிலை ஏற்படுகின்றது.
"என்னுடைய" என்ற பற்று அகன்று விட்டால் துன்பம் அத்தனையும் அகன்று விடும். ஞானியும் பொருளின் மேல்ஆனந்தம் கொள்கிறான். பொருட்களை வியக்கிறான், உபயோகிக்கிறான், ஈட்டுகிறான், அடைகிறான். ஆனால் அவனிடம் அந்த பொருளின் மேல் ஆசை இருப்பதில்லை. அது இருந்த போதும் ஆனந்தம் கொள்கிறான். இல்லாது பொயினும் ஆனந்தம் மட்டுபடுவதில்லை. "அன்றலர்ந்த தாமரை போல்" ராமன் காட்டுக்குச் சென்றதைப் போல. நமக்கு தெரியாதவனின் இறப்பு நம்மை எத்தனை அளவு பாதிக்கிறதோ, அதே அளவு தெரிந்தவனின் இறப்பும் பாதித்தால், அதே அளவே நமக்கு வேண்டியவனின் இறப்பும் பாதித்தால், பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்ட ஞானியின் பட்டியலில் நம்மையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பத்ம வியூகத்தைப் பற்றியும் அது தொடர்பான மஹாபாரதக் கதையும் சோவும் தயாரிப்பாளரும் பகிர்ந்து கொண்டனர். நம் வாழ்வில் வரும் பந்தங்களும் பற்றும் கூட பத்ம வியூகம் தான். நம்மால் சுலபமாய் உடைத்து நுழைந்துவிட முடிகிறது. இப்படிப்பட்ட பற்றில் பத்ம வியூகத்தில் மாட்டிய அற்ப மானிடராய் வெளி வரவும் வழியின்று நாம் வாழ்ந்து மடிந்தும் போகிறோம்.
(வளரும்)
-
20th May 2009 06:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks