-
14th September 2014, 05:06 AM
#1
Junior Member
Newbie Hubber
வெங்கி ராம்,
இளைய ராஜா நல்ல பாடல்கள் தரவில்லைஎன்றோ அல்லது மெலடி ,கொண்டாட்ட பாடல்கள் தரவில்லைஎன்றோ நாங்கள் சொல்லவில்லையே? நீங்கள்தான் இளையராஜா என்ற ஒன்றை தவிர எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள் ,ரொம்பவும் பார்வையில் குறை பாட்டோடு. interlude ,preludes ,mood music என்பவை அவருக்கு முன்னால் வந்தவை. என்றும் ஜீவித்திருப்பவை. இளைய ராஜா செய்ததெல்லாம் ,technological embellishment (இதில் ரகுமான் அவரை தாண்டி எங்கோ சென்றார் புதிய trend உருவாக்கி). அதே போல ஒன்று ஹிட் அடித்து விட்டால் ,அதே மெலடி முப்பது முறையாவது வரும்.நீங்களும் சலிக்காமல் பாராட்டி கொண்டே இருப்பீர்கள். அவரின் பட எண்ணிக்கை கருதி ,இதை குறையாக நான் சொல்லவில்லை.
நீங்கள் புகழ்வது குறையில்லை. புகழும் விதம் sycophant அளவில் சென்று விடுகிறது. இதை "intellectual tunnel vision" என்று குறிப்போம். தங்கள் கருத்துக்களை என்றுமே பொருட்படுத்துபவன் நான். நான் சொல்பவற்றையும் கேளுங்கள்.ரசிகரான நீங்கள் ,மேலும் உங்களை வளர்த்து கொண்டு பார்வை விசாலம் பெறலாம். அதே சமயம் இளைய ராஜா contemporary ஆன நான் அவர் காட்டிய வளர்ச்சியில் ஆனந்தம் அடைந்தே வந்துள்ளேன்.
Last edited by Gopal.s; 14th September 2014 at 05:13 AM.
-
14th September 2014 05:06 AM
# ADS
Circuit advertisement
-
14th September 2014, 05:38 AM
#2
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
வெங்கி ராம்,
இளைய ராஜா நல்ல பாடல்கள் தரவில்லைஎன்றோ அல்லது மெலடி ,கொண்டாட்ட பாடல்கள் தரவில்லைஎன்றோ நாங்கள் சொல்லவில்லையே? நீங்கள்தான் இளையராஜா என்ற ஒன்றை தவிர எல்லாவற்றையும் மறுக்கிறீர்கள் ,ரொம்பவும் பார்வையில் குறை பாட்டோடு. interlude ,preludes ,mood music என்பவை அவருக்கு முன்னால் வந்தவை. என்றும் ஜீவித்திருப்பவை. இளைய ராஜா செய்ததெல்லாம் ,technological embellishment (இதில் ரகுமான் அவரை தாண்டி எங்கோ சென்றார் புதிய trend உருவாக்கி). அதே போல ஒன்று ஹிட் அடித்து விட்டால் ,அதே மெலடி முப்பது முறையாவது வரும்.நீங்களும் சலிக்காமல் பாராட்டி கொண்டே இருப்பீர்கள். அவரின் பட எண்ணிக்கை கருதி ,இதை குறையாக நான் சொல்லவில்லை.
நீங்கள் புகழ்வது குறையில்லை. புகழும் விதம் sycophant அளவில் சென்று விடுகிறது. இதை "intellectual tunnel vision" என்று குறிப்போம். தங்கள் கருத்துக்களை என்றுமே பொருட்படுத்துபவன் நான். நான் சொல்பவற்றையும் கேளுங்கள்.ரசிகரான நீங்கள் ,மேலும் உங்களை வளர்த்து கொண்டு பார்வை விசாலம் பெறலாம். அதே சமயம் இளைய ராஜா contemporary ஆன நான் அவர் காட்டிய வளர்ச்சியில் ஆனந்தம் அடைந்தே வந்துள்ளேன்.
அப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டால் அது பிழையே. அதற்கு எதிரான நிலைதான் சரி. அதாவது ராஜா மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிடுகையில் எந்தெந்த தளங்களில் வேறுபட்டு விஸ்வரூபமாக நிற்கிறார் என்பதை பகுத்துப் பார்க்கும் ஞானம் பலருக்கு இங்கு இல்லை என்றே நினைக்கிறென். நீண்டதொரு பாரம்பர்ய இசைச்சங்கிலித் தொடரில் கடைசி முடிச்சாகவும் ஆனாலும் முற்றிலும் மாறுபட்டும் நிற்கும் புதுமை ராஜா. ஒரு பாஹ்-மொசார்ட்-பீதோவன்-தியாகரஜய்யர்-நாட்டாரிசை இசைவகைகளின் கலவை. அவருடன் இந்த நூற்றாண்டு மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்வதே ராஜாவின் வெறும் இருபத்து ஐந்து சதவீத இசைப்பங்களிப்பை ( பாடல்கள் ஆக்கம்) மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்படும் சிறு விளையாட்டுத் தனம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
14th September 2014, 05:47 AM
#3
Junior Member
Newbie Hubber
Originally Posted by
venkkiram
அப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டால் அது பிழையே. அதற்கு எதிரான நிலைதான் சரி. அதாவது ராஜா மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிடுகையில் எந்தெந்த தளங்களில் வேறுபட்டு விஸ்வரூபமாக நிற்கிறார் என்பதை பகுத்துப் பார்க்கும் ஞானம் பலருக்கு இங்கு இல்லை என்றே நினைக்கிறென். நீண்டதொரு பாரம்பர்ய இசைச்சங்கிலித் தொடரில் கடைசி முடிச்சாகவும் ஆனாலும் முற்றிலும் மாறுபட்டும் நிற்கும் புதுமை ராஜா. ஒரு பாஹ்-மொசார்ட்-பீதோவன்-தியாகரஜய்யர்-நாட்டாரிசை இசைவகைகளின் கலவை. அவருடன் இந்த நூற்றாண்டு மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்வதே ராஜாவின் வெறும் இருபத்து ஐந்து சதவீத இசைப்பங்களிப்பை ( பாடல்கள் ஆக்கம்) மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்படும் சிறு விளையாட்டுத் தனம்.
இங்குதான் நான் வேறு படுகிறேன். நான் chopin ,bach beethovan ,mozart இசைகளை கேட்டு அனுபவித்தவன்.இளையராஜா symphony தர போகிறார் என்பதில் குதுகலித்தவன். ஆனால் nothing but wind காற்றின் வழி இந்த செவியில் நுழைந்து அந்த செவி வழியே சென்று விட்டது. இதயம்,அறிவு பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.அவரின் பல சோதனைகள் ஒரு மாணவனின் ஆர்வ கோளாறு என்று மட்டுமே பார்க்க கூடியவை.
-
14th September 2014, 06:42 AM
#4
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
தங்கள் கருத்துக்களை என்றுமே பொருட்படுத்துபவன் நான். நான் சொல்பவற்றையும் கேளுங்கள்.ரசிகரான நீங்கள் ,மேலும் உங்களை வளர்த்து கொண்டு பார்வை விசாலம் பெறலாம்.
நன்றி. உலகத்தில் எந்தவொரு இசையமைப்பாளராக இருந்தாலும் மேன்மையான இசையாக்கங்களை ராஜா மூலமே அடைந்துவிடலாம். அந்த வழியில் ஜி ராமநாதன், சி.ஆர் சுப்பராமன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கேவிமகாதேவன் என எல்லோரது பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தே வருகிறேன்.
உங்கள் எம்.எஸ்.வி கட்டுரைக்கு வாழ்த்துக்கள். மேதையின் சிறப்பம்சங்களை இலக்கண ரீதியாக மட்டுமே விவரிப்பதோடு நின்றுவிடாமல் எளியோர்க்கும் புரியும் வண்ணம் பாடலாக்கங்க்களில் எம்.எஸ்.வி தொடங்கிவைத்த முதற்கண் முயற்சிகளை சுட்டிக்காட்டவும். என்னைப் போன்றவர்களுக்கு புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். உதாரணத்திற்கு.. ராஜாவின் பாடல் ஒன்று. காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற "நதியில் ஆடும் பூவனம்" பாடலின் ஆரம்பத்தில் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இடம்பெற..அதன் நடுவில் உதயமாகும் ஜானகியின் ராக ஆலாபனை...இரண்டும் ஒன்றோடொன்று சங்கமித்து ஒரு இடத்தில் ஸ்லோகம் நின்றுவிட பிரதான மெலடி மட்டுமே (ஜானகி குரல்) நீட்டித்து முடியும் நேரத்தில் பல்லவி ஆரம்பிக்கிறது. என் இதுவரையிலான பாடல் கேட்கும் அனுபவத்தில் இந்தவகை முயற்சியில் இதுவே முதற்கண் பாடலாகத் தோன்றியது. (ராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்களின் பாடல்களில் இந்த யுத்தி வந்திருந்தால் சுட்டிக் காட்டலாம்)
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks